தொடர்ந்த பயிற்சியில் இருபத்து எட்டாவது நாள்

காட்டலு மாகுங் கலந்திரு பத்தேழில்
காட்டலு மாகுங் கலந்தெழும் ஒன்றெனக்
காட்டலு மாகுங் கலந்திரு பத்தெட்டிற்
காட்டலு மாகுங் கலந்தஈ ரைந்தே – 782

விளக்கம்:
தொடர்ந்த யோகப்பயிற்சியின் இருபத்து ஆறாவது நாளில் விசுத்தி, ஆக்கினை ஆகிய இரண்டு ஆதாரங்களில் மட்டும் மனம் நிலைபெறும் என்பதை முந்தைய பாடலில் பார்த்தோம். தொடர்ந்து இருபத்து ஏழாவது நாளில், ஆறு ஆதாரங்களில் இருந்து மேலே எழும் சக்தியை ஒன்றாகக் காணலாம். இருபத்து எட்டாவது நாளில் ஆறு ஆதாரங்களின் சக்தியும், ஏழாவது ஆதாரமான துரியம் எனப்படும் சகசிரதளத்தில் கலந்து நிற்பதைக் காணலாம்.

Leave a Reply

error: Content is protected !!