மூச்சுக்காற்று சிறந்த கொள்முதல் ஆகும்

ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை
ஆரு மறியார் அளக்கின்ற வாயுவை
ஆரு மறியார் அழிகின்ற அப்பொருள்
ஆரு மறியா அறிவறிந் தேனே – 786

விளக்கம்:
தொடர்ந்த யோகப்பயிற்சியில் இருப்பவர்களால் மட்டுமே குண்டலினியின் இயக்கத்தை உணர முடியும். அவர்களுக்கு மட்டுமே மூச்சுகாற்றை முறைப்படுத்தும் கலை தெரியும். யோகப்பயிற்சி செய்யாத மற்றவர்களுக்கும் மூச்சுக்காற்று வீணாகக் கழியும். யோகம் செய்யும் சாதகர்களுக்கு மூச்சுக்காற்று சிறந்த கொள்முதல் ஆகும். மற்றவர்களுக்குக் கைவராத சூட்சுமம் எல்லாம் யோகப்பயிற்சில் இருப்பவர்களுக்கு மட்டுமே கைகூடும்.

Leave a Reply

error: Content is protected !!