மது போன்ற ஒரு போதையைத் தரும் குண்டலினி

அதுவரு ளும்மரு ளான துலகம்
பொதுவரு ளும்புக ழாளர்க்கு நாளும்
மதுவரு ளும்மலர் மங்கையர் செல்வி
இதுவருள் செய்யும் இறைஅவ னாமே – 788

விளக்கம்:
இந்த உலகம் அறியாமை என்னும் மயக்கத்தில் இருக்கிறது. மயக்கம் நிறைந்த இந்த உலகிற்கு பொதுவாக அருள் செய்யும் சிவபெருமான், தொடர்ந்து யோகம் செய்யும் யோகிகளுக்குத் தனியாக சில விஷேச அருட்களைத் தருகிறான். அவற்றுள் முக்கியமான ஒன்று எதுவென்றால், நாள்தோறும் யோகநிலையில் இருக்கும் யோகிகளுக்கு, குண்டலினியாகிய பராசக்தி மது போன்ற ஒரு போதையை அளிக்கிறாள்.

சிவயோகிகள் வெளியே மதுவைத் தேட வேண்டியதில்லை. அவர்களுக்கு யோகப்பயிற்சியினால் உள்ளூர மது ஊறுகிறது.

Leave a Reply

error: Content is protected !!