வாரசூலம்-02

தெக்கண மாகும் வியாழத்துச் சேர்த்திசை
அக்கணி சூலமு மாமிடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே – 798

விளக்கம்:
தன்னுடைய கழுத்திலே எலும்புகளை அணிந்திருக்கும் சிவபெருமானது சூலம், வியாழக்கிழமைகளில் தெற்குத் திசையில் இருக்கும். நம்முடைய பயணம் சூலத்திற்கு இடப்பக்கமாகவோ, பின்னோக்கியோ இருந்தால் துக்கம் ஏதும் ஏற்படாது. சூலத்திற்கு எதிராகவோ, வலப்பக்கமாகவோ நம் பயணம் அமைந்தால் மென்மேலும் தீவினைகள் வந்து சேரும்.

உதாரணத்திற்கு, கிழக்கே சூலம் என்றால், நம்முடைய பயணம் கிழக்குத் திசையிலோ, தெற்குத் திசையிலோ இருக்கக்கூடாது. மேற்கு அல்லது வடக்குத் திசையில் பயணம் செய்யலாம்.

தெக்கணம் – தெற்கு, அக்கணி – அக்கு + அணி, எலும்புகளை அணிந்திருக்கும் சிவபெருமான்

Leave a Reply

error: Content is protected !!