எமனுக்கே இடம் இல்லை! துன்பத்துக்கு ஏது இடம்?

தீவினை யாடத் திகைத்தங் கிருந்தவர்
நாவினை நாடின் நமனுக் கிடமில்லை
பாவினை நாடிப் பயனறக் கண்டவர்
தேவினை யாடிய தீங்கரும் பாமே – 807

விளக்கம்:
நாமெல்லாம் நம்முடைய தீவினைகளின் பலனாக வரும் துன்பங்களைப் பார்த்து திகைத்து நிற்கிறோம். தீவினைகளில் இருந்து விடுபட, நாம் கேசரியோகம் பயின்று, குண்டலினி சக்தியின் மேல் நோக்கிய நாவைக் குறித்து தியானம் செய்வோம். கேசரியோகம் பயில்பவர் இடத்தில் எமனுக்கே வேலை இல்லை, துன்பத்துக்கு ஏது இடம்? தூய்மையான வழியான யோகத்தின் பலன்களைக் கண்டவர்கள், தீங்கரும்பாகிய தெய்வத்தின் அருளைப் பெறுவார்கள்.

பா – தூய்மை, தே – தெய்வம்

Leave a Reply

error: Content is protected !!