நம் அனுபவத்திலேயே தெரிந்து கொள்ளலாமே!

விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னி
நலங்கிடுங் கண்டத்து நாபியி னுள்ளே
வணங்கிடு மண்டலம் வாய்த்திடக் கும்பிச்
சுணங்கிட நின்றவை சொல்லலு மாமே – 821

விளக்கம்:
மூலாதாரத்தில் விளங்கும் பிராணனை மேல் எழ தியானித்து கேசரியோகப் பயிற்சி செய்வோம். பயிற்சியின் போது, சுருங்கி விரிந்து அசையும் நாபியின் உள்ளும் தொண்டைப்பகுதியின் உள்ளும் பிராணனை மேலே ஏற்றி கும்பகம் செய்வோம். அப்படி பிராணனை மேலே ஏற்றி கும்பகம் செய்தால், மதி மண்டலத்தில் அமுதம் ஊறும். அமுதம் ஊறும் இந்நிலை வாய்த்தால், நாம் அதிலேயே மூழ்கி இருக்கலாம், மற்ற உலக விஷயங்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

கேசரியோகத்தினால் ஏற்படும் பலன்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ? நம் அனுபவத்திலேயே தெரிந்து கொள்ளலாமே!

உன்னி – நினைத்து, நலங்கிடுதல் – அசைதல், கண்டம் – தொண்டை, கும்பிச்சு – கும்பகம் செய்து, உணங்கிட – செயலற

Leave a Reply

error: Content is protected !!