சித்தம் கலங்காது செய்யும் பரியங்க யோகம்

வைத்த இருவருந் தம்மின் மகிழ்ந்துடன்
சித்தங் கலங்காது செய்கின்ற ஆனந்தம்
பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும்
வித்தக னாய்நிற்கும் வெங்கதி ரோனே – 835

விளக்கம்:
உடலையும் மனத்தையும் பரியங்கயோகத்தில் இருத்தி, சக்தியாகிய குண்டலினியை சகசிரதளத்தில் இருக்கும் சிவபெருமானுடன் சேரச் செய்து, சித்தம் கலங்காமல் யோகப்பயிற்சி செய்ய வேண்டும். அத்தகைய கடுமையான பயிற்சியை நாம் செய்தால், பத்துத் திசைகளில் இருக்கும் பதினெட்டு சிவகணங்களுக்கும் ஞான சூரியனாய் நிற்கும் சிவபெருமான் நமக்கும் ஞானம் வழங்கி அருள் செய்வான்.

பத்து வகை – பத்துத் திசைகள், பதிணென் கணம் – பதினெட்டு சிவ கணங்கள்

Leave a Reply

error: Content is protected !!