ஆணவம் அழிந்தால் நோயில்லாமல் வாழலாம்

நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
வில்லாற் புரத்தை விளங்கெரி கோத்தவன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.  – (திருமந்திரம் – 360)

விளக்கம்:
நல்லோர்களின் உடலில் உள்ள ஒன்பது துவாரங்களும் நோயில்லாமல் இன்புற்றிருக்க வேண்டி, பல தேவர்களும் சிவபெருமானிடம் ‘பரிந்து அருள் செய்!’ என வேண்டினார்கள். வில்லால் முப்புரம் அழித்த சிவபெருமானும், ஒளி மிகுந்த தீயாகிய அம்பை செலுத்தி பொல்லாத அசுரர்களை அழித்தான்.

சிவபெருமானை வேண்டினால், அவன் நம்முடைய ஆணவம் முதலிய மும்மலங்களை அழிப்பான். மும்மலங்கள் அழிந்தால் நமது உடலில் உள்ள ஒன்பது துவாரங்களும் நோயில்லாமல் இன்பம் பெறும்.

Leave a Reply

error: Content is protected !!