தெளிந்தார் கலங்கினும் நீ கலங்காதே!

தெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே
அளித்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை
விளிந்தா னது தக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யானே. – (திருமந்திரம் – 361)

விளக்கம்:
மனம் தெளிந்தவர்களே கலங்கினாலும் நாம் கலங்க வேண்டாம். அன்பினால் நாம் அடைவது முதற் கடவுளாகிய நம் சிவபெருமானை. அவன் தன்னை நினையாமல் தக்கன் செய்த வேள்வியை கோபத்தினால் அழித்தான். தங்கள் தவற்றை உணர்ந்த தேவர்களை மன்னித்து அருள் செய்தான்.  புனிதமான வார்த்தைகளைக் கூறுபவன் அவன்.

அளிந்து –  அன்பு செய்து,   விளிந்தான் – அழிந்தான்,   வீய – அழிய,  சுளிந்து – சினந்து

Leave a Reply

error: Content is protected !!