சிவபெருமானின் வல்லமை

பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்
குதஞ்செய்யும் அங்கி கொளுவியா காசம்
விதஞ்செய்யும் நெஞ்சில் வியப்பில்லை தானே.   – (திருமந்திரம் – 423)

விளக்கம்:
பல வகையான உயிர்கள் வாழ இடம் தரும் நிலப் பகுதி, உச்சியில் பனி படர்ந்திருக்கும் மலைகள், நீர் நிறைந்த ஏழு கடல்களின் பரப்பு, இவை அனைத்தையும் சிவபெருமான்  அக்கினியால் அழித்து வெட்டவெளி ஆக்கி விடுவான். இதைச் செய்ய அவனுக்குத் தும்மல் போடும் நேரம் போதும். அவனது வல்லமையை உணர்ந்தவர்க்கு இதில் வியப்பு அடைய எதுவுமில்லை.

பதம் – இடம், உத(க)ம் – தண்ணீர், குதம் – தும்மல், ஓதம் – கடல் அலை

Leave a Reply

error: Content is protected !!