அழிவு நிச்சயம்!

கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிசையாதி
ஒன்றின் பதந்செய்த ஓம்என்ற அப்புறக்
குண்டத்தின் மேலங்கி கோலிக் கொண்டானே.   – (திருமந்திரம் – 424)

விளக்கம்:
மலைகளின் மேலே உள்ள மேகங்களில் இருந்து மழையாக இறங்கி வரும் குலமகள், நீர்நிலைகளிலும், கடலிலும் தங்கி நமக்கெல்லாம் வாழ்வளிக்கிறாள். அதே நேரத்தில், நம் சிவபெருமான் தான் பக்குவம் செய்த இந்த மொத்த உலகத்தின் மீது நெருப்பை திரட்டி வைக்கிறான். அதனால் இந்த உலகிற்கு அழிவு என்பது உண்டு என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

Leave a Reply

error: Content is protected !!