அவனது செயல்பாட்டைப் புரிந்து கொள்ள முடியாது!

காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை
ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியை
ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கைச் செயலணை யாரே.   – (திருமந்திரம் – 434)

விளக்கம்:
நம் கண்ணின் ஒளியாக இருப்பவன் சிவபெருமான். அவனை அன்பாக நினைத்திருப்போம். ஆணாக, பெண்ணாக, அலியாக விளங்கும் ஆதிக்கடவுள் அவன். சுவையை உணரக்கூடிய மனத்தில் அவனை உணர்வோம். நெடுங்காலமாக இருந்து வரும் ஒரு நீர்நிலையின் அத்தனைக் கால செயல்பாட்டையும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. அது போலத்தான் அற்ப ஆயுளைக் கொண்ட நம்மால், மிகப் பழமையானக் கடவுளான அவனது செயல்பாட்டை அறிந்து கொள்ள முடியாது.

Leave a Reply

error: Content is protected !!