இருட்டறையை விட்டு வெளியே வாருங்கள்!

தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானுஞ்
சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும்
இருளும் அறநின் றிருட்டறை யாமே.   – (திருமந்திரம் – 435)

விளக்கம்:
ஆதிப்பிரானான நம்முடைய சிவபெருமான், தெளிவான அறிவு பெற்ற மக்களுக்கும் தேவர்களுக்கும், தன்னைப் பற்றி அறியச் செய்து இன்பம் அளிக்கிறான். அறிவில் தெளிவில்லாத மற்றவர்கள் அறியாமை என்னும் இருட்டறையில் இருக்கிறார்கள். தமது அறைக்கு வெளியே பகலில் சுருளச் செய்யும் சூரியனும், இரவில் சந்திரனும் வெளிச்சம் கொடுத்தவாறு இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. இருட்டறையே தமது உலகம் என்று நினைத்து மயங்குகிறார்கள்.

Leave a Reply

error: Content is protected !!