தனஞ்சயன் சரியாக இயங்கா விட்டால் …

வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமுங் கூனும் முடமுமாம்
வீங்கும் வியாதிகள் கண்ணில் மருவியே. – (திருமந்திரம் – 655)

விளக்கம்:
தனஞ்சயன் என்னும் காற்று நீங்கினால் நம் உயிர் நீங்கி விடும் என்பதை முந்தைய பாடல்களில் பார்த்தோம். தனஞ்சயன் சரியாக இயங்காவிட்டால் ஏற்படும் நோய்களை இந்தப் பாடல் சொல்கிறது. தனஞ்சயன் சரியாக இயங்காவிட்டால், உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் கட்டி, சிரங்கு, குட்டம், சோகை, வாதம், கூன், முடம், கண்ணில் ஏற்படும் வீக்கம் ஆகிய நோய்கள்  ஏற்படலாம்.

Leave a Reply

error: Content is protected !!