கூர்மன் என்னும் காற்று

கண்ணில் வியாதி உரோகந் தனஞ்சயன்
கண்ணில்  இவ்்வாணிகள் காசம் அவனல்லன்
கண்ணினிற் கூர்மன் கலந்திலன் ஆதலால்
கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே. – (திருமந்திரம் – 656)

விளக்கம்:
கண்ணில் ஏற்படும் வீக்கத்திற்கு தனஞ்சயன் என்னும் வாயு சரியாக இயங்காதது காரணம் என்பதை முந்தைய பாடலில் பார்த்தோம். கண் வீக்கத்திற்கு மட்டும் தான் தனஞ்சயன் காரணம் ஆனால் ஆராய்ந்து பார்த்தால் கண்ணில் ஏற்படும் ஆணிகளுக்கு தனஞ்சயன்  காரணம் இல்லை. கண்ணில் கூர்மன் என்னும் காற்று சரியாகப் பொருந்தாவிட்டால் கண்ணின் நரம்பு பாதிக்கப்படும். அதனால் கண்ணில் பார்வைக் குறைபாடு ஏற்படும்.

Leave a Reply

error: Content is protected !!