மூச்சின் இயக்கத்தை மட்டுமே சிந்திப்போம்

உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச்
சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச்
சிந்தித் தெழுப்பச் சிவனவ னாமே – 732

விளக்கம்:
பிராணாயாமத்தின் போது மூச்சுக்காற்றைக் கொப்பூழ்ப் பகுதிக்கு கீழே செல்ல விடாமல் தடுத்து மேலே செலுத்த வேண்டும். மூச்சின் இயக்கத்தை மட்டுமே சிந்தித்து மூச்சை மேலே எழுப்பி பயிற்சி செய்வதால் நிகழும் சிவமந்திரத்தை உணரலாம். சிவமந்திரத்தினால் மூச்சுக்காற்றை தலையின் உச்சியில் நிறுத்தலாம். மூச்சு உச்சியில் நிலைபெற்றால் நாம் சிவ அம்சம் பெற்றவர் ஆவோம்.

உந்திச்சூழி – கொப்பூழ்ச்சுழி
முகடு – உச்சி
அபானன் – நாபிக் கமலத்திலிருந்து கீழ் நோக்கிச் செல்லும் மற்றும் குதம் போன்ற இடங்களில் உள்ள வாயு

Leave a Reply

error: Content is protected !!