மனம் அமிழ்ந்து யோகப்பயிற்சி செய்வோம்

திறத்திறம் விந்து திகழும் அகாரம்
உறப்பெற வேநினைந் தோதும் சகாரம்
மறிப்பது மந்திரம் மன்னிய நாதம்
அறப்பெறல் யோகிக் கறநெறி யாமே – 731

விளக்கம்:
அம்ஸ மந்திரத்தில் ‘அம்’ என்பது மூச்சினை உள் வாங்குதற்கும், ‘ஸ’ என்பது மூச்சினை வெளிவிடுதற்கும் உரியனவாகும். பிராணாயாமத்தில் மனம் அமிழ்ந்து பயிற்சி செய்து வந்தால், அகாரமாகிய மூச்சை இழுத்தலும், சகாரமாகிய மூச்சை வெளிவிடுதலும் ஆகிய பயிற்சி அம்ச மந்திரத்தை நெற்றிப்பொட்டிலே ஸ்திரமாக நிகழச்செய்யும். பயிற்சியிலே மனம் பொருந்தி இருந்து சாதகம் செய்யும் யோகி நாதத்தை முழுமையாக உணர்வான். அறநெறியின்படி இது தானாகவே நிகழும்.

பிராணாயாமப் பயிற்சி, தாமாகவே நம்முள்ளே மந்திரத்தை உருவேற்றும். தனியாக உச்சரிக்க வேண்டியதில்லை.

உறப்பெறவே – மனதுக்கு நெருக்கமாக
திறத்திறம் – மிகவும் ஸ்திரமாக

Leave a Reply

error: Content is protected !!