மூன்று நாட்கள் தொடர்ந்து மூச்சுப்பயிற்சி செய்தால்…

ஏயிரு நாளும் இயல்புற ஓடிடிற்
பாயுரு நாளும் பகையற நின்றிடும்
தேய்வுற மூன்றுந் திகழவே நின்றிடில்
ஆயுரு வாறென் றளக்கலு மாமே – 778

விளக்கம்:
யோகப்பயிற்சியில் நமக்குப் பகையாக இருப்பது, கீழ் நோக்கிச் செல்லும் தன்மை உடைய அபான வாயு ஆகும். இரண்டு நாட்கள் தொடர்ந்து சுழுமுனையில் பொருந்தி இருந்து, மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் கீழ் நோக்கிப் பாயும் அபான வாயு நின்று விடும். மேலும் தொடர்ந்து மூன்றாவது நாளாகப் பயிற்சி செய்தால், ஆயுள் விருத்தி ஆகும் என்பதை அந்த யோக அனுபவமே நமக்கு உணர்த்தி விடும்.

ஏயிரு நாளும்- பொருந்தி இரு நாளும்

Leave a Reply

error: Content is protected !!